/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மோசமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
/
மோசமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : நவ 02, 2024 12:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம், அக். 31-
குழந்தைப்பட்டி கிராமத்திற்கு செல்லும் தார் சாலை, மிகவும் மோசமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட, கருப்பத்துார் பஞ்சாயத்து வரகூர் பகுதியில் இருந்து குழந்தைப்பட்டி வரை சாலை செல்கிறது. இந்த சாலையை ஏராளமானோர் பயன்படுத்துகின்றனர். தற்போது பல இடங்களில், கற்கள் பெயர்ந்து மிகவும் மோசமான நிலையில் சாலை இருக்கிறது.
இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மேலும் சாலையில், போதிய தெரு விளக்குகள் இல்லாததால் ஓட்டுனர்கள் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே, சாலையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.