sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

இன்னொரு மொழியை சீண்ட வேண்டாம் கமலுக்கு எம்.பி., ஜோதிமணி 'சுளீர்' பதில்

/

இன்னொரு மொழியை சீண்ட வேண்டாம் கமலுக்கு எம்.பி., ஜோதிமணி 'சுளீர்' பதில்

இன்னொரு மொழியை சீண்ட வேண்டாம் கமலுக்கு எம்.பி., ஜோதிமணி 'சுளீர்' பதில்

இன்னொரு மொழியை சீண்ட வேண்டாம் கமலுக்கு எம்.பி., ஜோதிமணி 'சுளீர்' பதில்


ADDED : மே 30, 2025 01:39 AM

Google News

ADDED : மே 30, 2025 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் :''நம்முடைய மொழி உயர்வை உலகில் சொல்ல வேண்டுமே தவிர, இன்னொரு மொழியை சீண்ட வேண்டியது கிடையாது,'' என, கரூர் எம்.பி.,ஜோதிமணி கூறினார்.

வாங்கல் குப்புச்சிபாளையத்தில் 'உழவரைத்தேடி வேளாண், உழவர் நலத்துறை திட்டம்' தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற, கரூர் எம்.பி., ஜோதிமணி நிருபர்களிடம் கூறியதாவது: எல்லா மக்களும் அவர்களது தாய்மொழி பழமையானது என்பதை நம்புவர்.

ஒரு மொழியை தாழ்த்தியும், ஒரு மொழியை உயர்த்தியும் பேசினால் பிரச்னை வருவது இயல்பு தான். நாம் நிற்க வேண்டியது தமிழ் ஒரு செம்மொழி. அது, 3,000 ஆண்டுகள் பழமையானது அதற்கான வரலாற்று தரவுகளை நிறுவி இருக்கிறோம். நம்முடைய மொழி உயர்வை உலகில் சொல்ல வேண்டும் தவிர, இன்னொரு மொழியை சீண்ட வேண்டியது கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று, கமல் கூறிய பேச்சுக்கு, கர்நாடகாவில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், எம்.பி.,ஜோதிமணி இவ்வாறு கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us