/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாலையில் தேங்கிய மண் வாகன ஓட்டுனர்கள் அவதி
/
சாலையில் தேங்கிய மண் வாகன ஓட்டுனர்கள் அவதி
ADDED : மார் 03, 2026 04:20 AM
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரத்தில் உள்ள சாலைகளில், கழிவு மண் தேங்கி-யதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்தில், 15 வார்டுகள் உளளன. தற்போது சாக்கடை கட்டும் பணி நடந்து வந்தது. இதற்காக பயன்படுத்தும் எம்.சாண்ட் மற்றும் ஜல்லி கற்கள் சாலையில் கொட்டப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டன.பணிகள் முடிந்தும் மீதமுள்ள மண் மற்றும் ஜல்லிகள் அகற்றப்ப-டவில்லை. இதனால் சாலையில் தேங்கிய, எம்சாண்ட் மண் கழிவு மற்றும் ஜல்லி கற்கள் பல இடங்களில் சிதறி கிடப்-பதால், சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெறும் அவ-திப்படுகின்றனர்.
இந்நிலையில் நேற்று காலை, கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சா-யத்து செயல் அலுவலர் வெங்கடேசன், தேங்கிய மண் கழிவு-களை நேரில் ஆய்வு செய்தார். பின்னர், சம்பந்தப்பட்ட ஒப்பந்த-தாரர்களிடம் தேங்கிய மண் குவியலை அகற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.

