/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் ஏழாம் ஆண்டு சூரசம்ஹார விழாவுக்கான முகூர்த்தக்கால் நடல்
/
ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் ஏழாம் ஆண்டு சூரசம்ஹார விழாவுக்கான முகூர்த்தக்கால் நடல்
ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் ஏழாம் ஆண்டு சூரசம்ஹார விழாவுக்கான முகூர்த்தக்கால் நடல்
ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் ஏழாம் ஆண்டு சூரசம்ஹார விழாவுக்கான முகூர்த்தக்கால் நடல்
ADDED : அக் 22, 2024 01:15 AM
ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் ஏழாம் ஆண்டு
சூரசம்ஹார விழாவுக்கான முகூர்த்தக்கால் நடல்
குளித்தலை, அக். 22-
குளித்தலை அடுத்த, அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில், சூரசம்ஹார விழா அறக்கட்டளை மற்றும் குடிப்பாட்டுக்காரர்கள், ஊர் பொதுமக்கள் சார்பில், ஏழாம் ஆண்டு கந்த சஷ்டி விழாயொட்டி நேற்று காலை முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து முகூர்த்த கால் நடப்பட்டது. நவ., 1 மாலை, 6:00 மணியளவில் மலையிலிருந்து ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேதா சுப்பிரமணிய சுவாமி கீழே எழுந்தருளல், 6 ல் மாலை, 6:00 மணிக்கு மேல் வீரபாகு துாது நிகழ்வு நடைபெறுகிறது. 7 மாலை 4:30 மணிக்கு முருகப்பெருமான் அன்னையிடம் சக்திவேல் வாங்குதல் நிகழ்வு, கஜமுக சூரன் ,சிங்கமுகசூரன், பானு கோபம், சூரபத்மன் சம்ஹார பெருவிழா நடைபெறுகிறது. தொடர்ந்து வாண வேடிக்கை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நவ., 8 காலை 9:00 மணிக்கு மேல் வள்ளி தேவசேனா சமேதா சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் மற்றும் விருந்தும் நடைபெறுகிறது. விழா குழுவினர், குடிப்பாட்டுக்காரர்கள், ஊர் பொதுமக்கள், கோவில் செயல் அலுவலர் தங்கராஜீ மற்றும் பணியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.