/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பல வண்ண கிரானைட் குவாரி திட்டம் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்
/
பல வண்ண கிரானைட் குவாரி திட்டம் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்
பல வண்ண கிரானைட் குவாரி திட்டம் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்
பல வண்ண கிரானைட் குவாரி திட்டம் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்
ADDED : ஏப் 30, 2025 01:07 AM
குளித்தலை:குளித்தலை அடுத்த, தோகை
மலையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பாக, பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. மாவட்ட கலால் உதவி ஆணையர் கருணாகரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு கனிம நிறுவன மேலாளர் கணேசன் முன்னிலை வகித்தார்.
நாகனுார் கிராமத்தில் அமைக்கப்பட உள்ள, தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் மூலம், பல வண்ண கிரானைட் குவாரி திட்டம் குறித்து பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. பலர் ஆதரித்தும், சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் பேசினர்.
பின்னர் அனைவரின் கருத்து
களையும் பதிவு செய்த அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டு, பொதுமக்கள் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். முன்னதாக மேற்படி திட்டங்கள் குறித்து வெண்திரையில் விளக்கம் அளிக்கப்பட்டது. தோகைமலை இன்ஸ்பெக்டர் ஜெயராமன், நாகனுார் வி.ஏ.ஓ., வின்னரசு பிரபு உள்பட பலர்
கலந்து கொண்டனர்.

