/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
'பல தானியங்கள் பயிரிட்டு மண்ணில் வளத்தை பெருக்கலாம்'
/
'பல தானியங்கள் பயிரிட்டு மண்ணில் வளத்தை பெருக்கலாம்'
'பல தானியங்கள் பயிரிட்டு மண்ணில் வளத்தை பெருக்கலாம்'
'பல தானியங்கள் பயிரிட்டு மண்ணில் வளத்தை பெருக்கலாம்'
ADDED : ஜூன் 07, 2024 12:03 AM
கரூர் : பல தானியங்கள் பயிரிட்டு, மண்ணில் வளத்தை பெருக்கலாம் என, விதை சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குனர் மணிமேகலை தெரிவித்துள்ளார்.
அவர், வெளியிட்ட அறிக்கை:கரூர் மாவட்டத்தில் பரவலாக அனைத்து இடங்களிலும் மழை பெய்து வருகிறது. இதனை பயன்படுத்தி பல தானியங்கள் பயிரிட்டு, அதனை மடக்கி உழுவதன் மூலம் மண்ணில் நுண்ணுயிர் பெருக்கம் அடைய செய்யலாம். தானிய பயிரில் சோளம், கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி, சாமை, திணை இவற்றில் எளிதாக கிடைக்கும், நான்கு தானியங்களை எடுத்துக் கொள்ளலாம். பயறு வகை பயிர்களான உளுந்து, துவரை, தட்டைப்பயறு, நரி பயறு, பாசிப்பயறு, கொள்ளு போன்றவைகளையும், எண்ணெய் வித்து பயிரில் நிலக்கடலை, எள், ஆமணக்கு போன்றவற்றையும் இத்துடன் கடுகு, சோம்பு, மல்லி, வெந்தயம், சணப்பு தக்கைப்பூண்டு கொழுஞ்சி போன்றவை எளிதில் கிடைக்கும்.
ஓவ்வொரு பயிர் சாகுபடிக்கு முன்னதாக பல தானியங்களை பயிரிட்டு மடக்கி உழவு செய்வதன் மூலம் பல்வேறு மகத்தான நன்மைகள் மண்ணில் ஏற்படுத்தலாம். இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.