sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மதுபாட்டிலுக்கு தமிழில் பெயர் வைத்தது தி.மு.க.,வின் சாதனை: மாஜி அமைச்சர்

/

மதுபாட்டிலுக்கு தமிழில் பெயர் வைத்தது தி.மு.க.,வின் சாதனை: மாஜி அமைச்சர்

மதுபாட்டிலுக்கு தமிழில் பெயர் வைத்தது தி.மு.க.,வின் சாதனை: மாஜி அமைச்சர்

மதுபாட்டிலுக்கு தமிழில் பெயர் வைத்தது தி.மு.க.,வின் சாதனை: மாஜி அமைச்சர்


ADDED : ஏப் 12, 2024 07:03 AM

Google News

ADDED : ஏப் 12, 2024 07:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் : ''டாஸ்மாக் மூலம் மதுபாட்டிலுக்கு, வீரன் என தமிழில் பெயர் வைத்து விற்பனை செய்வதுதான், தி.மு.க., அரசின் மூன்றாண்டு கால சாதனை,'' என, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.

கரூர் அருகே, கிருஷ்ணராயபுரம் சட்டசபை தொகுதி பச்சப்பட்டியில் நடந்த பிரசார கூட்டத்தில், அ.தி.மு.க., வேட்பாளர் தங்கவேலுவை ஆதரித்து, மாவட்ட அ.தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜய பாஸ்கர் பேசியதாவது:

அ.தி.மு.க., ஆட்சியில் பெண்கள் முன்னேற்றத்துக்காக தாலிக்கு தங்கம், ஆடு, மாடுகள் வழங்கும் திட்டம், கர்ப்பிணி பெண்களுக்கு பரிசு பெட்டகம், உதவித்தொகை, மாணவர்களுக்கு லேப்டாப் திட்டத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றினார். அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி, முதல்வராக இருந்த போது, கோழி குஞ்சுகளை வழங்கினார்.இந்த திட்டங்களை எல்லாம், தி.மு.க., அரசு நிறுத்தி விட்டது. அதற்கு பதிலடியாக தி.மு.க., அரசுக்கு நீங்கள் பாடம் புகட்ட வேண்டும். அதற்கு, வரும் லோக்சபா தேர்தலை பயன்படுத்தி கொண்டு, அ.தி.மு.க., வேட்பாளர் தங்கவேலுவை, ஐந்து லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். கடந்த, ஐந்து ஆண்டுகளுக்கு முன் வெற்றி பெற்ற ஜோதிமணி, தற்போதுதான் தொகுதி பக்கம் வேட்பாளராக வருகிறார். அவரை மீண்டும் வெற்றி பெற வைத்து, தவறு செய்து விடாதீர்கள். ஜோதிமணி வெற்றி பெற்றால், கரூர் பக்கம் வர மாட்டார். அவரை பார்க்க முடியாது. அ.தி.மு.க., வேட்பாளர் தங்கவேலை வெற்றி பெற வைத்தால், கரூர் லோக்சபா தொகுதியை விட்டு நகர மாட்டார். உங்களுடைய சுகம், துக்கங்களில் பங்கு பெறுவார்.தமிழ் மொழியை சொல்லி ஆட்சியை பிடித்த, தி.மு.க., டாஸ்மாக் மூலம் விற்பனை செய்யப்படும், மதுபாட்டிலுக்கு வீரன் என, தமிழில் பெயர் வைத்ததுதான், மூன்றாண்டு கால சாதனை. கோடைக்காலத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கும் நிலையில், கரூர் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பள்ளப்பட்டி, புகழூர் நகராட்சியில் குடிநீரை சிக்கனமாக செலவு செய்ய வேண்டும் என, அறிக்கைகள் வெளியாகியுள்ளது. கடந்த, 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில், மூன்று சதவீத ஓட்டுக்கள் வித்தியாசத்தில் அ.தி.மு.க., தோற்றது. அதற்கு காரணம், தி.மு.க., அளித்த பொய்யான வாக்குறுதிகளே. குடும்ப தலைவிக்கு மாதம், 1,000 ரூபாய் தருவேன் என, தேர்தல் வாக்குறுதியில் முதல்வர் ஸ்டாலின் சொன்னார். ஆனால் தரவில்லை. அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி கொடுத்த அழுத்தம் காரணமாக, 27 மாதங்கள் கழித்து உரிமை தொகை தந்தனர்.இவ்வாறு அவர் பேசினார்.அப்போது, அ.தி.மு.க., வேட்பாளர் தங்கவேல், மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலாளர் தானேஷ் முத்துக்குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us