sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 13, 2026 ,மாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நாட்டு நலப்பணி திட்ட முகாம் நிறைவு

/

நாட்டு நலப்பணி திட்ட முகாம் நிறைவு

நாட்டு நலப்பணி திட்ட முகாம் நிறைவு

நாட்டு நலப்பணி திட்ட முகாம் நிறைவு


ADDED : ஜன 30, 2026 04:53 AM

Google News

ADDED : ஜன 30, 2026 04:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய, நாட்டு நலப்-பணி திட்ட சிறப்பு முகாம், வெஞ்சமாங்கூடலுார் மேற்கு ஊராட்சி பகுதியில் நடைபெற்றது.

நிறைவு விழாவிற்கு, கரூர் அரசு கல்லுாரி தொல்லியல் துறை பேராசிரியர் செந்தில்குமார், வழக்கறிஞர் முகமது அலி, பொரு-ளாதார குற்றப்பிரிவு ஆய்வாளர் நிஷா, வெஞ்சமாங்கூடலுார் ஊராட்சி செயலாளர் கலையரசன், கணினி உதவியாளர் சரவண-குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கல்லுாரி முதல்வர் காளீஸ்வரி தலைமை வகித்தார்.

கடந்த 7 நாட்களாக நடந்த சேவை முகாமில், 50 நாட்டு நலப்-பணி திட்ட மாணவ, மாணவியர் பங்கேற்று உழவாரப்பணி, காசநோய் மற்றும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு, வாக்காளர் விழிப்புணர்வு பேரணி, மருத்துவ முகாம், மரம் நடுதல் போன்ற பணிகளில் ஈடுபட்டனர்.

மேலும் அரசு சார்ந்த இடங்கள், கோவில், கிராம நிர்வாக அலுவ-லகம், குழந்தைகள் நல மையம் ஆகிய பகுதிகளை சுற்றியுள்ள இடங்களை துாய்மைப்படுத்தியும், நீர்நிலைகள் மற்றும் அடர்ந்த புல்வெளிகள், முள்வெளிகளை அகற்றியும், கருவேல மரங்கள் உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் மரங்களை அகற்றி கிராமத்திற்கு பயனுள்ள சேவைகளை மேற்கொண்டனர்.






      Dinamalar
      Follow us