/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் பஸ் ஸ்டாண்டில் புதிய வணிக வளாகம்
/
கரூர் பஸ் ஸ்டாண்டில் புதிய வணிக வளாகம்
ADDED : நவ 25, 2024 02:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் பஸ் ஸ்டாண்டில் புதிய வணிக வளாகம் கட்டும் பணி தொடக்க விழா, நேற்று நடந்தது.
அதில், கரூர் பஸ் ஸ்டாண்ட் தென்புற பகுதியில், ஆறாவது மாநில நிதிக்குழு, 2023-24ம் ஆண்டு திட்டத்தின் கீழ், இரண்டு கோடியே, 85 லட்ச ரூபாய் செலவில், புதிய வணிக வளாகம் கட்டும் பணியை, மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, கலெக்டர் தங்கவேல், மேயர் கவிதா, துணை மேயர் தாரணி சர-வணன், மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.