ADDED : டிச 26, 2024 03:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மகிளிப்பட்டி, உடை-யந்தோட்டம், மாயனுார், எழுதியாம்பட்டி, காட்டூர், செக்கணம் பகுதிகளில் விவசாயிகள், பரவலாக பூக்கள் சாகுபடி செய்து வரு-கின்றனர். செடிகளில் இருந்து பூக்களை பறித்து, விற்பனை செய்-வதற்காக திருச்சி, குளித்தலை, முசிறி, கரூர் ஆகிய இடங்களில் செயல்படும் பூ மார்க்கெட்டுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
தற்போது பனிக்காலம் என்பதால் பூக்கள் பூப்பது குறைந்துள்ளது. இதனால் சீரான விலையில் விற்கப்படுகிறது. விரிச்சிப்பூக்கள் கிலோ, 90 ரூபாய், செண்டுமல்லி, 70 ரூபாய், சின்னரோஜா, 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

