ADDED : அக் 21, 2024 07:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர், புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட நிறைவையொட்டி, சான்றிதழ் வழங்கு நிகழ்ச்சி நடந்தது.
தலைமையாசிரியர் வளர்மதி தலைமை வகித்தார். நஞ்சை புகழுர் பகுதியில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், பங்கேற்ற மாணவர்களுக்கு, புகழூர் நகராட்சி தலைவர் குணசேகரன் சான்றிதழ் வழங்கினார். பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் நாச்சிமுத்து, மாவட்ட தொடர்பு அலுவலர் யுவராஜா, புகழூர் நடைப்பயிற்சி கழக செயலாளர் அண்ணாவேலு உள்பட பலர் பங்கேற்றனர்.

