ADDED : அக் 01, 2024 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
என்.எஸ்.எஸ்., திட்ட முகாம்
கரூர், அக். 1-
கரூர் காந்தி கிராமம் அன்னை தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில், என்.எஸ்.எஸ்., திட்ட முகாம், பசுபதிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று நடந்தது.
அதில், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சந்திரசேகர், கொசு ஒழிப்பு, நோய் தடுப்பு முறைகள், போதை பொருட்கள் ஒழிப்பு, சமூக ஊடகங்களின் தாக்கம் குறித்து பேசினார். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர்கள் கரோலின், ஜான்சி ராணி மற்றும் மாணவியர் பங்கேற்றனர். முன்னதாக, மாணவியர் பங்கேற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. என்.எஸ்.எஸ்., திட்ட முகாம் கடந்த, 28 ல் தொடங்கி வரும் அக்., 4 வரை நடக்கிறது.