/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நர்சுகள் 3வது நாளாக காத்திருப்பு போராட்டம்
/
நர்சுகள் 3வது நாளாக காத்திருப்பு போராட்டம்
ADDED : டிச 22, 2025 08:41 AM

கரூர்: கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், நேற்று,கோரிக்கைகளை வலியுறுத்தி நர்சுகள், மூன்றாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில், தி.மு.க., அரசு தேர்தல் வாக்குறுதி, 356ஐ உடனடியாக நிறைவேற்ற வேண்டும்; உச்சநீதிமன்ற மேல் முறையீட்டு வழக்கை கைவிட வேண்டும்; தொகுப்பூதிய செவிலியர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும், 11 மாத ஒப்பந்த பணி முறையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் கடந்த, 18 முதல் நர்சுகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அவர்களுக்கு ஆதரவாக, கரூர் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் நேற்று, மாவட்ட செயலாளர் தேவி தலைமையில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று மூன்றாவது நாளாக காத்திருப்பு போராட்டம் நடந்தது. அதில், நர்சுகள் பங்கேற்றனர். முன்னதாக, கரூர் மாவட்ட அரசு ஊழியர் சங்க தலைவர் அன்பழகன், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நர்சுகளை சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.

