/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சுகாதார செவிலியருக்கு ஒருநாள் பயிற்சி முகாம்
/
சுகாதார செவிலியருக்கு ஒருநாள் பயிற்சி முகாம்
ADDED : நவ 25, 2024 02:42 AM
குளித்தலை: குளித்தலை, காவேரி நகர் அண்ணா சமுதாய மன்றத்தில் பஞ்-சப்பட்டி, தோகைமலை, இனுங்கூர், ஆகிய, 3 வட்டாரத்தை சேர்ந்த கிராம சுகாதார செவிலியர்கள், பகுதி சுகாதார செவிலி-யர்கள், சமுதாய சுகாதார செவிலியர்கள், வட்டார சுகாதார புள்-ளியியலாளர் ஆகியோருக்கான ஒருநாள் பயிற்சி முகாம் நடந்-தது. இதில், கர்ப்பிணிகள் பதிவு, பிரசவ இடம் திட்டமிடல், மகப்பேறு நிதியுதவி, நோய் தடுப்பு பணி ஆகியவற்றை கணி-னியில் பதிவேற்றம் செய்யும் முறைகளுக்கான பயிற்சி நடந்தது. மாவட்ட சுகாதார அலுவலர் சுப்பிரமணியன் ஆலோசனை வழங்-கினார்.
தொடர்ந்து, மாவட்ட தாய்சேய் நல அலுவலர் கலைவாணி, உதவி இயக்குனர் (புள்ளியியல்) செந்தாமரைச்செல்வி, தடுப்-பூசி மருந்து பராமரிப்பாளர் அருண் ஆகியோர் பயிற்சி வழங்-கினர். வட்டார மருத்துவ அலுவலர்கள் இனுங்கூர் சிவக்குமார், தோகைமலை தங்கராஜ், பஞ்சப்பட்டி நகராட்சி நகர ஆரம்ப சுகதார மைய மருத்துவர் சகிலா ஆகியோர் கலந்துகொண்டனர்.