sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நீடித்த நிலையான வேளாண்குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம்

/

நீடித்த நிலையான வேளாண்குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம்

நீடித்த நிலையான வேளாண்குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம்

நீடித்த நிலையான வேளாண்குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம்


ADDED : ஏப் 18, 2025 02:28 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 02:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:கரூரில், மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம் சார்பில், நீடித்த நிலையான வேளாண் குறித்த ஒருநாள் பயிற்சி முகாம் நடந்தது.

கரூர் ஆர்.டி.ஓ.,முகமது பைசல் தலைமை வகித்தார். மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சிவானந்தம், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், செயற்கை உரம். பூச்சிக்கொல்லி ஆகியவற்றை கட்டுப்படுத்தி வேளாண் காடுகள் மூலம் பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வை கட்டுப்படுத்த விளக்கம் அளித்தார்.

கரூர் வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் கோபி, பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வு மற்றும் அதனை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும், கரூர் வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதன்மை அலுவலர் பாலசுப்ரமணியன், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள் பற்றி பேசினர். நிகழ்ச்சியில், வேளாண் துணை இயக்குனர் (மாநில திட்டம்) ராமசாமி, வேளாண் துணை இயக்குனர் (உழவர் பயிற்சி நிலையம்) லீலாவதி, மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் (வேளாண்) உமா, வேளாண்மை உதவி இயக்குனர் (தரம் மற்றும் கட்டுப்பாடு) பார்த்திபன், தாந்தோன்றி வட்டார வேளாண் உதவி இயக்குனர் காதர் மொய்தீன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us