sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பைக்கிலிருந்து விழுந்தவர்கள் மீது கார் மோதி ஒருவர் பலி;மற்றொருவர் காயம்

/

பைக்கிலிருந்து விழுந்தவர்கள் மீது கார் மோதி ஒருவர் பலி;மற்றொருவர் காயம்

பைக்கிலிருந்து விழுந்தவர்கள் மீது கார் மோதி ஒருவர் பலி;மற்றொருவர் காயம்

பைக்கிலிருந்து விழுந்தவர்கள் மீது கார் மோதி ஒருவர் பலி;மற்றொருவர் காயம்


ADDED : மே 16, 2025 01:41 AM

Google News

ADDED : மே 16, 2025 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், முன்னாள் சென்ற சரக்கு வாகனம் மீது, பைக் மோதி தவறி விழுந்த இருவரில் ஒருவர் கார் மோதி இறந்தார். மற்றொருவர் காயமடைந்தார்.

திருப்பூர் மாவட்டம் முதலிபாளையம் சிட்கோ பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார், 20. திருப்பூரில் தனியார் கல்லுாரியில் படித்து வருகிறார். இவரது உறவினர் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை சேர்ந்த எலக்ட்ரீஷியன் மதன்தாஸ், 17. இவர்கள் இருவரும் கும்பகோணத்தில் இருந்து, திருப்பூருக்கு பைக்கில் சென்றனர். சந்தோஷ்குமார் பைக்கை ஓட்ட, பின்னால் மதன்தாஸ் அமர்ந்திருந்தார்.

நேற்று முன்தினம் கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகில், வெங்ககல்பட்டி சாலையில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது, முன்னால் சென்ற டாடா ஏஸ் வாகன டிரைவர் திடீரென பிரேக் அடித்துள்ளார். இதில் தடுமாறிய பைக், டாடா ஏஸ் மீது மோதியதில், இரண்டு பேரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். சாலையில் விழுந்து கிடந்த, இவர்கள் மீது அந்த வழியே சென்ற கார் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மதன்தாஸ் பலியானார். காயமடைந்த சந்தோஷ்குமார், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து, தான்தோன்றிமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us