/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த புகார்களை தெரிவிக்க வாய்ப்பு
/
பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த புகார்களை தெரிவிக்க வாய்ப்பு
பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த புகார்களை தெரிவிக்க வாய்ப்பு
பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த புகார்களை தெரிவிக்க வாய்ப்பு
ADDED : ஜன 05, 2025 07:21 AM
கரூர்: ரேஷன் கடைகளில் வழங்கும், பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து புகார்களை தெரிவிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
அவர், வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில், பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட, அரிசி பெறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்புடன் பொங்கல் பரிசு தொகுப்பு  வழங்கப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் மூன்று லட்சத்து, 32 ஆயிரத்து, 76 அரிசி அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்க-ளுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
ரேஷன் அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களில் எவ-ரேனும் ஒருவர்  பொங்கல் பரிசு தொகுப்பு பெற்றுக் கொள்-ளலாம்.அங்கீகரிக்கப்பட்ட நபர் வாயிலாகவோ, இதர நபர் வாயி-லாகவோ பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படமாட்டாது. கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, அந்தந்த ரேஷன் கடைகள் மூலம் டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. வரும், 10  ல் வெள்ளிக்கிழமை ரேஷன் கடைகள்  செயல்படும்.
இது குறித்த புகார்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1967, 1800-425-5901  ஆகிய எண்களிலும். கரூர் தாலுகா,- 94450 00266,    அரவக்குறிச்சி தாலுகா, 94450 00267,   குளித்தலை தாலுகா,  94450 00268,       கிருஷ்ணராயபுரம் தாலுகா, 94450 00269,  கடவூர் தாலுகா 94457 96408,   புகழூர் தாலுகா 94450 43244,  மண்மங்-கலம் தாலுகா  94999 37035, 97894 67689 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

