sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வேட்டை தடுப்பு காவலர்களை தனியார் முகமைக்கு மாற்ற எதிர்ப்பு

/

வேட்டை தடுப்பு காவலர்களை தனியார் முகமைக்கு மாற்ற எதிர்ப்பு

வேட்டை தடுப்பு காவலர்களை தனியார் முகமைக்கு மாற்ற எதிர்ப்பு

வேட்டை தடுப்பு காவலர்களை தனியார் முகமைக்கு மாற்ற எதிர்ப்பு


ADDED : ஜூன் 10, 2024 01:18 AM

Google News

ADDED : ஜூன் 10, 2024 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம்: வேட்டைத்தடுப்பு காவலர்களை தனியார் முகமைக்கு பணிமாற்றம் செய்யக்கூடாது என, தமிழக முதல்வர், வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு, பவானிசாகர் முன்னாள் எம்.எல்.ஏ., சுந்தரம் மனு அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான வேட்டைத்தடுப்பு காவலர்கள், வனத்துறையில் தினக்கூலி மற்றும் தொகுப்பூதியம் அடிப்படையில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். வன விலங்குகளை பாதுகாத்தல், உயிர்கொல்லி விலங்குகளை பிடித்தல், வனத்தீயை தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை உயிரை பணயம் வைத்து மேற்கொள்கின்றனர். இதில் -எளிய குடும்பத்து இளைஞர்களே பெரும்பாலும் உள்ளனர். பலர் பழங்குடியினரும் ஆவர். இவைர்களுக்கு பணி பாதுகாப்பு இல்லை. விலங்கு தாக்குதலால் இறந்தால் நிவாரணமும் இல்லை. இவர்களை தற்போது வனத்துறையிலிருந்து தனியார் முகமைக்கு மாற்றம் செய்யப்படுவது தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக சத்தி புலிகள் காப்பகத்தில், வேட்டைத்தடுப்பு காவலர்களின் ஆவணங்கள் பெறப்பட்டு வருகிறது.

முதல்வர் ஸ்டாலின் இப்பிரச்சனையில் தலையிட்டு, முதன்மை தலைமை வனப்பாதுகாவலரின் பணியாளர் விரோத சுற்றிக்கையை திரும்ப பெறச் செய்ய வேண்டும். சத்தி புலிகள் காப்பக வேட்டைத்தடுப்பு காவலர்களை, தனியார் முகமைக்கு மாற்றுவதை உடனடியாக கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us