/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
காளிங்கராயன் பாசனத்தில் நெல் அறுவடை தீவிரம்
/
காளிங்கராயன் பாசனத்தில் நெல் அறுவடை தீவிரம்
ADDED : டிச 07, 2024 06:44 AM
ஈரோடு: பவானிசாகர் அணை யில் திறக்கப்படும் தண்ணீர், காளிங்கராயன் அணைக்கட்டில் பிரிந்து, காளிங்கராயன் வாய்க்கால் மூலம், பவானி, ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி தாலுகாவில் பாசன வசதி வழங்குகிறது.
இப்பாசன பகுதியில், 15,400 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்-றன. காளிங்கராயன் பாசனத்தில் நெல் பயிர் செய்ததில், ஈரோடு, கருங்கல்பாளையம், வெண்டிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், 4,000க்கும் மேற்பட்ட ஏக்கரில் தற்போது
அறுவடை நடந்து வரு-கிறது.
இப்பகுதியில் பெரும்பாலும், இயந்திர அறுவடையே நடப்-பதால், வயல் வெளியிலும், தங்கள் கிராமப்பகுதியில் உள்ள
களங்களிலும் நெல்லை உலர்த்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்-டுள்ளனர். காளிங்கராயன் வாய்க்காலில் பாசனத்துக்கு
தண்ணீர் நிறுத்தப்பட்ட போதிலும், மழை நீர், கழிவு நீர், கசிவு நீர் வாய்க்-காலில் செல்வதால், அவற்றையும் பாசனத்துக்கு
பயன்படுத்தி, அறுவடை பணியை விரைவுபடுத்தி வருகின்றனர்.