/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிருஷ்ணராயபுரம் பகுதியில் நெல் அறுவடை பணி
/
கிருஷ்ணராயபுரம் பகுதியில் நெல் அறுவடை பணி
ADDED : ஜன 22, 2026 07:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் பகுதியில், நெல் அறுவடை பணி நடந்து வருகிறது.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வல்லம், பிள்ளபாளையம், வீரகுமாரன்பட்டி, மகி-ளிப்பட்டி, கோடங்கிப்பட்டி, சரவணபுரம், கொம்-பாடிப்பட்டி, மகாதானபுரம், நந்தன்கோட்டை, கருப்பத்துார், கள்ளப்பள்ளி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். இதில் அதிகமாக ஆந்திரா பொன்னி, அட்சயா பொன்னி ரக நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
தற்போது வயல்களில் நெற்கதிர்கள் விளைச்சல் கண்டுள்ளது. இதையடுத்து டிராக்டர் இயந்திரம் கொண்டு, நெல் அறுவடை பணிகளில் விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

