sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வாகனம் மோதி பெயின்டர் பரிதாப பலி உறவினர்கள் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை

/

வாகனம் மோதி பெயின்டர் பரிதாப பலி உறவினர்கள் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை

வாகனம் மோதி பெயின்டர் பரிதாப பலி உறவினர்கள் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை

வாகனம் மோதி பெயின்டர் பரிதாப பலி உறவினர்கள் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை


ADDED : ஜன 06, 2025 01:55 AM

Google News

ADDED : ஜன 06, 2025 01:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அருகே, கடவூர் யூனியன், டி.இடையப்பட்டியை சேர்ந்தவர் பழனியப்பன், 35; பெயின்டர்; இவரது மனைவி பிர-வீனா, 26; இவர்களுக்கு, 6 வயதில் மகன், 2 வயதில் மகள் உள்-ளனர். இந்நிலையில், பழனியப்பன், நேற்று முன்தினம் காலை,

டூவீலரில் தரகம்பட்டிக்கு வேலைக்கு சென்றார்.

பின் வேலை முடிந்து, இரவு, 7:20 மணிக்கு கடவூர் - பாலவி-டுதி நெடுஞ்சாலை, வள்ளி நகர் என்ற இடத்தில், எச்.பி., காஸ் குடோன் வழியாக டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்-போது, அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் மோதி-யதில், பழனியப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பால-விடுதி போலீசார், சடலத்தை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.இந்நிலையில், பழனியப்பனின் உறவினர்கள், 100க்கும் மேற்-பட்டோர், நேற்று காலை, 10:00 மணி முதல் பாலவிடுதி போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள், விபத்து ஏற்படுத்திய வாகனத்தை கண்டு-பிடித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரின் குடும்பத்தா-ருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக்கோரிக்கை வைத்-தனர்.

பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், 'சிசிடிவி' பதிவுகளை வைத்து, இரண்டொரு நாளில் விபத்து ஏற்படுத்தியவரை கண்டு

பிடிப்பதாக தெரிவித்தனர். ஆனால், உடனடியாக குற்றவாளியை கண்டுபிடித்து தரக்கோரி, தொடர்ந்து

முற்றுகை போராட்டத்தில்

ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், பாலவிடுதி போலீஸ் ஸ்டேஷன் முன் பரபரப்பு ஏற்பட்-டுள்ளது.






      Dinamalar
      Follow us