/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பப்பாளி விளைச்சல் அதிகரிப்பு விலை குறைவால் விவசாயிகள் கவலை
/
பப்பாளி விளைச்சல் அதிகரிப்பு விலை குறைவால் விவசாயிகள் கவலை
பப்பாளி விளைச்சல் அதிகரிப்பு விலை குறைவால் விவசாயிகள் கவலை
பப்பாளி விளைச்சல் அதிகரிப்பு விலை குறைவால் விவசாயிகள் கவலை
ADDED : செப் 03, 2024 03:36 AM
கரூர்: பருவமழை காரணமாக மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பப்பாளி விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால், கரூருக்கு வரத்து அதிகரித்துள்ள நிலையில், விலை குறைந்துள்ளது.
தமிழகம் முழுவதும், பெரும்பாலான மாவட்டங்களில் நடப்-பாண்டு, தென்மேற்கு பருவ மழை எதிர்பார்த்த அளவில் பெய்-துள்ளது. கரூர் மாவட்டத்தில், தனியாக தோட்டம் அமைத்து, பப்-பாளி சாகுபடி செய்வதில்லை. இதனால் திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் இருந்து கரூருக்கு, பப்பாளி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக, பப்பாளி வரத்து அதிகரித்துள்ள நிலையில் விலை குறைந்துள்ளது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம், வத்திப்பட்டி, வலையப்பட்டி, லிங்கவாடி பகுதிகளில், நுாற்றுக்கணக்கான ஏக்கரில் பப்பாளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதில், ரெட் லேடி பப்பாளி ரகம் குறிப்பிடத்தக்கது. நடப்பாண்டில் திண்டுக்கல், மதுரை மாவட்-டத்தில் பெய்த தென்மேற்கு பருவ மழை காரணமாக, பப்பாளி விளைச்சல் அதிகரித்துள்ளது.
இதனால், தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு பப்பாளி அனுப்-பப்படுகிறது. ஒரு கிலோ பப்பாளி, 50 முதல், 60 ரூபாய் வரை விலை போகும். தற்போது வரத்து அதிகரித்துள்ளதால் கிலோ, 30 முதல், 40 ரூபாய் வரை விற்பனையாகிறது.
இவ்வாறு கூறினர்.