ADDED : பிப் 10, 2025 07:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர், நாரத கான சபாவில், ஸ்ரீருத்ர நடனாலயம் சார்பில் ஆடல் அரங்கம் என்ற பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. பரதநாட்டிய கலைஞர் சுஜாதா தொடங்கி வைத்தார்.
சஹானா, ஸ்மரித்தி, ஸ்ரீநிதி, சன்சிகா, ஹேமவர்த்தினி ஆகியோரது நடனம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. வாய்ப்பாட்டு ராஜா ஸ்ரீவர்ஷன், நட்டுவாங்கம் துஜான், மிருதங்கம் சதீஸ்குமார், வயலினிசை விக்டர் விகாஷ், குழலிசை சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

