/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாலையோரம் வாகனங்கள் நிறுத்தம்: போக்குவரத்து பாதிப்பு
/
சாலையோரம் வாகனங்கள் நிறுத்தம்: போக்குவரத்து பாதிப்பு
சாலையோரம் வாகனங்கள் நிறுத்தம்: போக்குவரத்து பாதிப்பு
சாலையோரம் வாகனங்கள் நிறுத்தம்: போக்குவரத்து பாதிப்பு
ADDED : மே 18, 2025 06:32 AM
கரூர்: கரூரில் இருந்து, தான்தோன்றிமலை சுங்ககேட் சாலை வழியாக அரசு அலுவலகங்கள், வட்டார போக்குவரத்து அலுவலகம், திருச்சி பைபாஸ் சாலை, கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்-களின் பிற பகுதிகளுக்கு அனைத்து வாகனங்களும் சென்று வரு-கின்றன. இதில், மில்கேட் பகுதியில் இருந்து பழைய எஸ்.பி., அலுவலகம் வரை, சாலையின் இருபுறமும் வர்த்தக நிறுவ-னங்கள் உள்ளன. இங்கு, சென்டர் மீடியன் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
வர்த்தக நிறுவனங்கள், வங்கிகள், டாஸ்மாக் நிறுவனங்களில் தினமும் பல வாடிக்கையாளர்கள் வருகின்றனர். இவர்கள், சாலை-யோரத்தில் வாகனங்களை நிறுத்தி விட்டு, நீண்ட நேரம் கழித்து எடுத்து செல்கின்றனர். சாலையின் எல்லையை குறிக்கும் வகையில், வெள்ளை கோடு வரையப்பட்டுள்ளது. அந்த கோட்-டையும் ஆக்கிரமித்து, சிறிய வாகனங்கள் கூட சாலையில் செல்ல முடியாத அளவுக்கு வரிசை கட்டி நிறுத்தப்படுகின்றன. இதனால், சாலையில் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்படுகிறது. இப்பிரச்-னைக்கு, போலீசார் தீர்வு காண வேண்டும்.