/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சர்வீஸ் சாலையில் வாகன நிறுத்தம் போக்குவரத்து நெரிசலால் தவிப்ப,....
/
சர்வீஸ் சாலையில் வாகன நிறுத்தம் போக்குவரத்து நெரிசலால் தவிப்ப,....
சர்வீஸ் சாலையில் வாகன நிறுத்தம் போக்குவரத்து நெரிசலால் தவிப்ப,....
சர்வீஸ் சாலையில் வாகன நிறுத்தம் போக்குவரத்து நெரிசலால் தவிப்ப,....
ADDED : ஜூலை 14, 2025 04:23 AM
கரூர்: சர்வீஸ் சாலையில், நீண்ட நேரம் வாகனங்களை நிறுத்தி வைப்-பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கரூர் மாநகரைச் சுற்றிலும், கரூர்-திருச்சி, மதுரை-சேலம் ஆகிய ஊர்களுக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. திருக்காம்புலியூர், வெங்ககல்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் மேம்பாலம் கட்-டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. முக்கிய மேம்பாலங்களில் சர்வீஸ் சாலைகள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
இந்த சர்வீஸ் சாலைகளில் கனரக வாகனங்கள் நீண்ட நேரம் நிறுத்தி வைப்பதால், மற்ற வாகனங்கள் எளிதாக செல்ல முடி-யாத நிலை நிலவி வருகிறது. சில நேரங்களில் கடும் போக்குவ-ரத்து பாதிப்பு ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சர்வீஸ் சாலைகளில் வாகன நிறுத்தத்தை கண்காணிக்க தேவையான ஏற்-பாடுகளை செய்ய வேண்டும்.

