sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஆட்சியில் பங்கு என்பது தேர்தல் நேரத்தில் பேசும் விஷயம்; எம்.பி., ஜோதிமணி

/

ஆட்சியில் பங்கு என்பது தேர்தல் நேரத்தில் பேசும் விஷயம்; எம்.பி., ஜோதிமணி

ஆட்சியில் பங்கு என்பது தேர்தல் நேரத்தில் பேசும் விஷயம்; எம்.பி., ஜோதிமணி

ஆட்சியில் பங்கு என்பது தேர்தல் நேரத்தில் பேசும் விஷயம்; எம்.பி., ஜோதிமணி


ADDED : செப் 29, 2024 03:26 AM

Google News

ADDED : செப் 29, 2024 03:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: ''ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்பது, தேர்தல் நேரத்தில் பேச வேண்டிய விஷயம்,'' என, கரூர் காங்.,- எம்.பி., ஜோதிமணி தெரிவித்தார்.

கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாநில சிறுபான்மை-யினர் ஆணையம் சார்பில், கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. இதில், எம்.பி., ஜோதிமணி பங்கேற்ற பின், நிருபர்களிடம் கூறி-யதாவது:காங்., கட்சியை பொறுத்தவரை ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்பது தேர்தல் நேரத்தில் பேச வேண்டிய விஷயம் என்-பதை நினைக்கிறோம். உரிய நேரத்தில் கூட்டணி குறித்து பேசும்-போது, மற்ற விஷயங்களை பற்றி பேசுவோம். அனைத்து அர-சியல் கட்சிகளுமே, ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்திற்கு வர வேண்டும் என்று விரும்புகின்றன. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி இல்லை என்றாலும், முதல்வர் ஸ்டாலின் சிறப்பான ஆட்-சியை நடத்தி வருகிறார். வி.சி.க., நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில், இண்டியா கூட்டணியை சேர்ந்த அனைத்து கட்சி-களும் பங்கேற்க உள்ளோம். மதுவிலக்கு நிலைப்பாட்டை பொருத்தவரை, யாருக்கும் இரு வேறு கருத்து கிடையாது. அனைத்து கட்சியினருமே மதுவிலக்கு வேண்டுமென்றே சொல்-கின்றனர். மது உட்பட அனைத்து விதமான போதை பொருட்-களும் இல்லாத, சமுதாயத்தையே நாம் விரும்புகிறோம்.

இவ்வாறு அவர், கூறினார்.






      Dinamalar
      Follow us