sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ரயில்வே ஸ்டேஷன்களில் மூடப்பட்ட கழிப்பறைகளால் பயணியர் அவதி

/

ரயில்வே ஸ்டேஷன்களில் மூடப்பட்ட கழிப்பறைகளால் பயணியர் அவதி

ரயில்வே ஸ்டேஷன்களில் மூடப்பட்ட கழிப்பறைகளால் பயணியர் அவதி

ரயில்வே ஸ்டேஷன்களில் மூடப்பட்ட கழிப்பறைகளால் பயணியர் அவதி


ADDED : ஆக 25, 2025 03:03 AM

Google News

ADDED : ஆக 25, 2025 03:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: திருச்சி, சேலம், ஈரோடு மார்க்கங்களில் உள்ள ரயில்வே ஸ்டேஷன்களில் கழிப்பறைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், பயணியர் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

கரூர் வழியாக திருச்சி, ஈரோடு, திண்டுக்கல், சேலம் மார்க்கமாக நாள்தோறும் சிறப்பு ரயில்கள் சென்று வருகின்றன. நாள்தோறும், ஆயிரக்கணக்கான பயணிகள் சென்று வருகின்றனர். ஆனால், பெரும்பாலான ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள கழிப்பறைகள் மூடி வைக்கப்பட்டுள்ளன. இதனால், ரயில்வே ஸ்டேஷன்களில் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். குறிப்பாக, சேலம், திருச்சி, ஈரோடு மார்க்கங்களில் உள்ள ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள கழிப்ப-றைகள் எந்த நேரமும் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது.

இதுகுறித்து, ரயில்வே பயணியர் கூறியதாவது: திருச்சி, ஈரோடு, திண்டுக்கல், ஈரோடு, சேலம் மார்க்கத்தில் உள்ள ரயில்வே ஸ்டேஷன்களில் கழிப்பறைகள் திறக்கப்படுவதில்லை. இதனால், ரயில்வே ஸ்டேஷனில் கழிப்பறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால், ஸ்டேஷன் மாஸ்டர் அறைக்கு சென்று, சாவியை கேட்டு வாங்கி செல்ல வேண்டும். இதில், பெண்களுக்கு தயக்கம் ஏற்படுகிறது. இதனால், ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள கழிப்பறைகளை திறந்து வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us