/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பாஸ்போர்ட் சேவா கேந்திரா திருப்பூரில் திறப்பு
/
பாஸ்போர்ட் சேவா கேந்திரா திருப்பூரில் திறப்பு
ADDED : ஜன 21, 2025 07:00 AM
திருப்பூர்: திருப்பூர் தலைமை தபால் நிலையத்தில் பாஸ்போர்ட் சேவா கேந்-திரா வரும் 24 ம் தேதி துவங்கப்படவுள்ளது.
திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில், ரயில்வே ஸ்டேஷன் எதிரில் திருப்பூர் தலைமை தபால் நிலையம் உள்ளது. இங்கு தபால் துறையின் சேவைகள் மற்றும் ஆதார் மையமும் இயங்கி வருகி-றது. தற்போது திருப்பூர் பகுதி மக்களின் வசதிக்காக பாஸ்போர்ட் சேவா கேந்திரா அமைக்கப்படவுள்ளது.வரும் 24 ம் தேதி காலை 11:00 மணிக்கு இதன் துவக்க விழா நடக்கிறது. முதன்மை பாஸ்போர்ட் அலுவலர் சீனிவாசன், மேற்கு மண்டல தபால் துறை தலைவர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இதில்
அமைச்சர்கள் சாமி_நாதன், கயல்விழி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.கலெக்டர், போலீஸ் மற்றும் மாநகராட்சி கமிஷனர்கள், எஸ்.பி., - எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், மேயர் உள்ளிட்டோர் கலந்து கொள்-கின்றனர்.திருப்பூர் பகுதி மக்கள் தங்கள் பாஸ்போர்ட் தொடர்பான பணிக்-காக கோவை சென்று வர வேண்டியுள்ளது. இதைத் தவிர்க்கும் வகையில் பாஸ்போர்ட் விண்ணப்பித்தல் உள்ளிட்ட முதல் கட்-டப்பணிகள், டோக்கன் வழங்குதல்
ஆகியன இம்மையம் மூலமா-கவே மேற்கொள்ளப்படும். இதன் மூலம் கோவை பாஸ்போர்ட் அலுவலகம் சென்று வரும் அலைச்சல் தவிர்க்கப்படும் என எதிர்-பார்க்கப்படுகிறது.

