/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் அருகே நாளை பென்சனர் குறைதீர் கூட்டம்: கமிஷனர்
/
கரூர் அருகே நாளை பென்சனர் குறைதீர் கூட்டம்: கமிஷனர்
கரூர் அருகே நாளை பென்சனர் குறைதீர் கூட்டம்: கமிஷனர்
கரூர் அருகே நாளை பென்சனர் குறைதீர் கூட்டம்: கமிஷனர்
ADDED : ஜன 26, 2025 04:45 AM
கரூர்: திருச்சி மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறு-வனம் சார்பில், பி.எப்., உங்கள் அருகில் மற்றும் பென்சனர் குறைதீர் கூட்டம், கரூர் அருகே நாளை (27ல்) நடக்கிறது.
இதுகுறித்து, திருச்சி மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன கமிஷனர்
ஆஷிஷ் குமார் திருபாதி வெளியிட்ட அறிக்கை:பி.எப்., உங்கள் அருகில் மற்றும் பென்சனர் குறைதீர் கூட்டம் நாளை காலை, 9:00 மணி முதல் மாலை, 5:45 மணி வரை கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலை காக்காவாடியில் உள்ள ஸ்ரீ ரங்கா பாலிமர்ஸ் நிறுவனத்தில் நடக்கிறது. அதில், தொழில் நிறு-வனங்களின் உரிமையாளர்கள், தொழிலாளர்கள், ஓய்வூதியர்கள் கலந்து கொண்டு குறைகளை, உரிய ஆவணங்களுடன் தெரி-வித்து, தீர்வு பெறலாம்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.

