/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நாய்கள் இனப்பெருக்கம் அதிகரிப்பால் மக்கள் பீதி
/
நாய்கள் இனப்பெருக்கம் அதிகரிப்பால் மக்கள் பீதி
ADDED : நவ 20, 2024 01:55 AM
நாய்கள் இனப்பெருக்கம்
அதிகரிப்பால் மக்கள் பீதி
கரூர், நவ. 20-
கரூர் அருகே, நாய்கள் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளதால், மக்கள் பீதியில் உள்ளனர்.
கரூர் மாநகராட்சி, திருச்சி சாலையில் உள்ள வடக்கு மற்றும் தெற்கு காந்தி கிராமம் வளர்ந்து வரும் நகராக உள்ளது. இங்கு ஏராளமான குடியிருப்புகளில், ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வடக்கு மற்றும் தெற்கு காந்தி கிராமம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், 100க்கும் மேற்பட்ட நாய்கள் உலா வருகிறது. இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் பணிகளை முடித்து, வீடு திரும்புவோரை நாய்கள் துரத்துகிறது. டூவீலர்களில் செல்வோர் சிலர் பயத்தில் கீழே விழுந்து விடுகின்றனர்.
இதனால், காந்தி கிராமத்தில் வசிக்கும் மக்கள், நாய்க்கடி பீதியில் உள்ளனர். எனவே, வடக்கு மற்றும் தெற்கு காந்தி கிராமம் பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை, கட்டுப்படுத்த கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

