/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தெரு விளக்குகள் இன்றி சிரமப்படும் பொதுமக்கள்
/
தெரு விளக்குகள் இன்றி சிரமப்படும் பொதுமக்கள்
ADDED : நவ 06, 2024 01:27 AM
தெரு விளக்குகள் இன்றி
சிரமப்படும் பொதுமக்கள்
கிருஷ்ணராயபுரம், நவ. 6-
பிள்ளபாளையம் இரட்டை வாய்க்கால் பாலம் அருகில், தெரு விளக்குகள் எரியாததால் அப்பகுதி முழுவதும் இருட்டாக உள்ளதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, மாயனுார் காவிரி ஆற்றில் இருந்து பிரிந்து கட்டளை மேட்டு இரட்டை வாய்க்கால் பிள்ள பாளையம் வழியாக, திருச்சி மற்றும் புதுக்கோட்டை வரை செல்கிறது. இந்த வாய்க்கால் நடுவில் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. பாலம் திறக்கப்பட்டு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பாலம் வழியாக, வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் செல்லும் போது, இருட்டாக இருப்பதால் சிரமப்படுகின்றனர். எனவே, பாலத்தின் இருபுறங்களில் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.