sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர்-சேலம் வழித்தடத்தில் ரயில்வே மேம்பாலம் கட்ட மக்கள் கோரிக்கை

/

கரூர்-சேலம் வழித்தடத்தில் ரயில்வே மேம்பாலம் கட்ட மக்கள் கோரிக்கை

கரூர்-சேலம் வழித்தடத்தில் ரயில்வே மேம்பாலம் கட்ட மக்கள் கோரிக்கை

கரூர்-சேலம் வழித்தடத்தில் ரயில்வே மேம்பாலம் கட்ட மக்கள் கோரிக்கை


ADDED : பிப் 18, 2024 10:35 AM

Google News

ADDED : பிப் 18, 2024 10:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் - சேலம் ரயில்வே இருப்பு பாதை வழியில், பெரிய குளத்துபாளையத்தில் மேம்பாலம் கட்ட வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கரூர் மாநகராட்சி, வெங்கமேடு - பெரிய குளத்துபாளையம் இடையே, சேலம் ரயில்வே இருப்பு பாதை அமைக்கப்பட்டு கடந்த, 2013ம் ஆண்டு முதல் போக்குவரத்து நடந்து வருகிறது. கரூர்-சேலம் இடையே நாள்தோறும், 10க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில் மற்றும் சரக்கு ரயில்கள் சென்று வருகின்றன. இதனால் ரயில்கள் செல்லும் போது, பெரிய குளத்துபாளையத்தில் உள்ள கேட் மூடப்படுகிறது. அந்த சமயத்தில், பெரிய குளத்து பாளையத்தில் இருந்து, கரூர் டவுன் மற்றும் வெங்கமேடு பகுதிகளுக்கு விரைவாக செல்ல

முடிவதில்லை.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:

பெரியகுளத்து பாளையம், சின்ன குளத்து பாளையம் பகுதிகளில், ஏராளமான வீடுகள் உள்ளன. ரயில்வே இருப்பு பாதை அமைக்கப்பட்ட போதே, பாலம் கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்தோம். ஆனால், சிறிய குகை வழிப்பாதை மட்டும் அமைக்கப்பட்டது. மழை காலங்களில் அந்த வழியாக செல்ல முடியவில்லை. கரூர்-சேலம் ரயில்வே வழித்தடம், மின் தடமாக மாற்றப்பட்டுள்ளது. அதிக ரயில்கள் செல்ல துவங்கியுள்ளது. அதிக வேகத்தில், ரயில்கள் இயக்க வாய்ப்புள்ளது. எதிர்காலத்தில் ரயில்களில் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும். இதனால், பெரிய குளத்துபாளையத்தில், கரூர் - சேலம் ரயில்வே வழித்தடத்தில் மேம்பாலம் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us