/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அமராவதி ஆற்றின் கிளை வாய்க்கால் பாலத்தை சீரமைக்க மக்கள் கோரிக்கை
/
அமராவதி ஆற்றின் கிளை வாய்க்கால் பாலத்தை சீரமைக்க மக்கள் கோரிக்கை
அமராவதி ஆற்றின் கிளை வாய்க்கால் பாலத்தை சீரமைக்க மக்கள் கோரிக்கை
அமராவதி ஆற்றின் கிளை வாய்க்கால் பாலத்தை சீரமைக்க மக்கள் கோரிக்கை
ADDED : மார் 29, 2025 07:15 AM
கரூர்: கரூர் அருகே, அமராவதி ஆற்றின் கிளை வாய்க்கால் பாலத்தை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர் மற்றும் பசுபதிபாளையம் பகுதியை இணைக்கும் வகையில், அமராவதி ஆற்றின் கிளை வாய்க்கால் பகுதியில், பல ஆண்டுகளுக்கு முன் சிறுபாலம் கட்டப்பட்டது. விவசாயிகள் அந்த பாலத்தை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், 2013ல் கரூர்-பசுபதிபாளையம் இடையே அமராவதி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டும் பணி நடந்தது. அப்போது, கிளை வாய்க்கால் மேல்பகுதியில் அமைந்த, சிறுபாலத்தை பொது-மக்கள் பயன்படுத்தினர்.
அப்போது, சிறுபாலத்தின் வழியாக கார், வேன் உள்ளிட்ட வாக-னங்களும் சென்று வந்தன. இதனால், சிறுபாலம் மற்றும் சாலைகள் பழுதடைந்த நிலையில் உள்ளது. பாலம் இடிந்து வாய்க்காலில் விழுந்தால், கழிவுநீர் அமராவதி ஆற்றில் நேரிடை-யாக சேரும் நிலை ஏற்படும். மேலும், சிறுபாலத்தை தாண்டி, சனீஸ்வரர் கோவில் உள்ளிட்ட இரண்டு கோவில்களுக்கு பக்-தர்கள் சென்று வருகின்றனர்.
இதனால், அமராவதி ஆற்றின் கிளை வாய்க்கால் மீது கட்டப்பட்-டுள்ள, சிறுபாலம் மற்றும் சாலைகளை சீரமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.