/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் அருகே தார்ச்சாலை அமைக்க மக்கள் எதிர்பார்ப்பு
/
கரூர் அருகே தார்ச்சாலை அமைக்க மக்கள் எதிர்பார்ப்பு
கரூர் அருகே தார்ச்சாலை அமைக்க மக்கள் எதிர்பார்ப்பு
கரூர் அருகே தார்ச்சாலை அமைக்க மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : மே 05, 2025 02:10 AM
கரூர்: கரூர் அருகே காவிரியாற்றுக்கு செல்லும் சாலையில், சிமென்ட் ஜல்லிக்கற்கள் போடப்பட்டு, பல மாதங்கள் ஆகிறது. தார்ச்-சாலை அமைக்காததால், பொதுமக்கள் பெரும் அவதிப்படுகின்-றனர்.
கரூர் மாவட்டம், புஞ்சை புகழூர் காவிரியாற்று பகுதிகளில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அந்த பகுதிகளில் இருந்து பொதுமக்கள், காவிரியாற்றுக்கு குளிக்கவும், துணிகள் துவைக்-கவும் நாள்தோறும் சென்று வருகின்றனர்.மேலும், காவிரியாற்று பகுதியில் நீரேற்றும் நிலையங்களுக்கும், ஊழியர்கள் சென்று வருகின்றனர். ஆனால், காவிரியாற்றுக்கு செல்லும் சாலை, குண்டும், குழியுமாக
இருந்தது. இதனால், பொதுமக்கள் தார்ச்சாலை அமைக்க வேண்டும் என, கோரிக்கை வைத்தனர்.
இதனால், புதிதாக தார்ச்சாலை அமைக்க, பல மாதங்களுக்கு முன் சிமென்ட் கலவை முதலில் கொட்டப்பட்டு, சமன்படுத்தப்-பட்டது. ஆனால், இதுவரை தார்ச்சாலை அமைக்கப்படவில்லை. இந்நிலையில், மழை காரணமாக சிமென்ட் கரைந்து, வெறும் ஜல்லிக்கற்கள் மட்டும் சாலையில் இருக்கும் நிலை உள்-ளது.
இதனால், பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலையில் உள்ளது. எனவே, புகழூரில் இருந்து காவிரியாற்றுக்கு செல்லும் பகுதியில், விரைவாக தார்ச்சாலை அமைக்க நடவ-டிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.