sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

செடிகளால் ஜி.ஹெச்., கட்டடம் சேதம் சீரமைக்க மக்கள் எதிர்பார்ப்பு

/

செடிகளால் ஜி.ஹெச்., கட்டடம் சேதம் சீரமைக்க மக்கள் எதிர்பார்ப்பு

செடிகளால் ஜி.ஹெச்., கட்டடம் சேதம் சீரமைக்க மக்கள் எதிர்பார்ப்பு

செடிகளால் ஜி.ஹெச்., கட்டடம் சேதம் சீரமைக்க மக்கள் எதிர்பார்ப்பு


ADDED : ஜூன் 02, 2025 03:48 AM

Google News

ADDED : ஜூன் 02, 2025 03:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் டவுன் பழைய அரசு மருத்துவமனை கட்டடத்தில் செடிகள் வளர்ந்து சேதமடைந்து வருகிறது. பெரியளவு சேதம் ஏற்படும் முன், சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கரூர்-வாங்கல் சாலை, பழைய கலெக்டர் அலுவலகம் அருகே, பல ஆண்டுகளாக தாலுகா அலுவலகம் மற்றும் அரசு மருத்துவமனை செயல்பட்டு வந்தது. கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில், 2020ல் கரூர் அருகே, காந்தி கிராமத்தில் புதிதாக மருத்துவ கல்லுாரி மருத்துவமனையை, அப்போதைய முதல்வர் இ.பி.எஸ்., திறந்து வைத்தார்.இதையடுத்து, கரூர் டவுன் அரசு மருத்துவமனையில் இருந்து, சித்தா மருத்துவ பிரிவை தவிர மற்ற பிரிவுகள் அனைத்தும், புதிய மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. தற்போது, பழைய அரசு மருத்துவமனையில், சித்தா பிரிவு, ஆயுர்வேத சிகிச்சை, இயற்கை மருத்துவ பிரிவுகள் செயல்படுகின்றன.

இந்நிலையில், பழைய அரசு மருத்துவமனை கட்டட சுவரில் செடிகள் முளைத்து சேதமடைந்து வருகிறது. இதனால், பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். எனவே, கரூர் டவுன் அரசு பழைய மருத்துவமனை கட்டடங்களை சீரமைக்க, கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us