sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வாரச்சந்தை கட்டடங்களை சீரமைக்க மக்கள் எதிர்பார்ப்பு

/

வாரச்சந்தை கட்டடங்களை சீரமைக்க மக்கள் எதிர்பார்ப்பு

வாரச்சந்தை கட்டடங்களை சீரமைக்க மக்கள் எதிர்பார்ப்பு

வாரச்சந்தை கட்டடங்களை சீரமைக்க மக்கள் எதிர்பார்ப்பு


ADDED : மே 05, 2024 02:00 AM

Google News

ADDED : மே 05, 2024 02:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, க.பரமத்தி வாரச்சந்தையில் உள்ள பழுதடைந்த கட்டடங்களை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள, க.பரமத்தியில் வாரந்தோறும் செவ்வாய் கிழமை சந்தை நடக்கிறது. இதில், சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். மேலும், கோவை, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட, வெளிமாவட்டங்களில் இருந்தும், வியாபாரிகள் க.பரமத்தி சந்தைக்கு வந்து செல்கின்றனர்.

ஆனால், க.பரமத்தி சந்தை பேட்டையில், கடை அமைக்கும் பகுதிகள் சிதிலம் அடைந்த நிலையில் உள்ளது. மேலும், சில கட்டடங்களும் பழுதடைந்துள்ளது. இதனால், போதிய இட வசதி இல்லாமல், வியாபாரிகள் திறந்த வெளிப்பகுதியில், சாலையோரத்தில் கடை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால், க.பரமத்தி சந்தை பேட்டையில், பழுதான கடைகளை சீரமைக்கவும், கூடுதலாக கட்டடங்கள் கட்டவும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us