/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பயன்பாடு இல்லாத தொட்டி டவுன் பஞ்., மக்கள் அவதி
/
பயன்பாடு இல்லாத தொட்டி டவுன் பஞ்., மக்கள் அவதி
ADDED : ஜூலை 17, 2025 01:37 AM
கரூர், கரூர் மாவட்டம், புலியூர் டவுன் பஞ்சாயத்து, கால்நடை மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் பகுதிகளில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அந்த பகுதியில் வசித்து வரும், பொதுமக்கள் வசதிக்காக டவுன் பஞ்., சார்பில், குடிநீர் குழாய் போடப்பட்டது. மேலும், போர்வெல் அமைக்கப்பட்டு, மின் மோட்டாரும் பொருத்தப்பட்டது.
இந்நிலையில், சில நாட்களாக குழாயில் குடிநீரும் வருவது இல்லை. மின் மோட்டார் மற்றும் போர்வெல் குழாய்களும் சேதமடைந்துள்ளதால், நிலத்தடி நீரையும் பொதுமக்களால் பயன்படுத்த முடியவில்லை. மின் மோட்டாரை இயக்க, அமைக்கப்பட்ட சுவிட்ச் போர்டுகளும் சேதமடைந்துள்ளது.
இதனால், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் மற்றும் நிலத்தடி நீரை பயன்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். எனவே, புலியூர் டவுன் பஞ்., நிர்வாகம், சேதமடைந்த குடிநீர் குழாய், போர்வெல் குழாய்களை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.