ADDED : டிச 28, 2024 02:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்ட, மக்கள் அதிகாரம் சார்பில், மாவட்ட செயலாளர்
சக்திவேல் தலைமையில், தலைமை தபால் நிலையம் முன், நேற்று
ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், ஒரே நாடு, ஒரே தேர்தல் சட்ட மசோதாவை கைவிடக்-கோரியும், நாடு முழுக்க ஒரே தேர்தல் நடத்த முயற்சிக்கும், மத்-திய அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்-டத்தில், திருச்சி மாவட்ட பொருளாளர் கார்க்கி, சாமானிய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் குணசேகரன் உள்பட பலர் பங்-கேற்றனர்.

