/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தீபாவளி பண்டிகையையொட்டி மார்க்கெட்டில் குவிந்த மக்கள்
/
தீபாவளி பண்டிகையையொட்டி மார்க்கெட்டில் குவிந்த மக்கள்
தீபாவளி பண்டிகையையொட்டி மார்க்கெட்டில் குவிந்த மக்கள்
தீபாவளி பண்டிகையையொட்டி மார்க்கெட்டில் குவிந்த மக்கள்
ADDED : அக் 28, 2024 04:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: தீபாவளி பண்டிகையையொட்டி, கரூர் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
நாடு முழுவதும் ஹிந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி பண்டிகை, வரும், 31ல் கொண்டாடப்படுகிறது.
இதற்காக, பொதுமக்கள் புத்தாடைகள், வீட்டு உபயோக பொருட்கள் வாங்கும் பணியில் ஈடுபட்டனர். கரூரில், எம்.எல்.ஏ., அலுவலக சாலை, ஜவஹர் பஜார் தற்காலிகமாக, 100க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், ஜவுளி வகைகள், காலணிகள், பட்டாசு ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று விடுமுறை என்பதால், காலை, 9:00 மணி முதல் பொது மக்கள் கூட்டம், எம்.எல்.ஏ., அலுவலக சாலை, ஜவஹர் பஜாரிலும் களைகட்டியது.