/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
3 சாலை பிரிவில் ரவுண்டானா அமைக்க மக்கள் வலியுறுத்தல்
/
3 சாலை பிரிவில் ரவுண்டானா அமைக்க மக்கள் வலியுறுத்தல்
3 சாலை பிரிவில் ரவுண்டானா அமைக்க மக்கள் வலியுறுத்தல்
3 சாலை பிரிவில் ரவுண்டானா அமைக்க மக்கள் வலியுறுத்தல்
ADDED : ஜன 05, 2025 01:47 AM
கரூர் :புன்னம் சத்திரம், மூன்று சாலை பிரிவில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என, பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர்-ஈரோடு சாலையில் புன்னம் சத்திரம் உள்ளது. அந்த பகுதியில், வேலாயுதம் பாளையம் டி.என்.பி.எல்., ஆலை, நாமக்கல் மாவட்டம், வேலுார், ஈரோடு மாவட்டம், கொடுமுடி உள்ளிட்ட பகுதிகளுக்கு சாலைகள் பிரிந்து செல்கிறது. இதனால், வாகன போக்குவரத்து அதிகளவில் உள்ளது. மேலும், அந்த பகுதியில் ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளது.
இந்நிலையில் புன்னம் சத்திரம், மூன்று சாலை பிரிவில் ரவுண்டானா இல்லாதால், பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் தாறுமாறாக செல்கின்றன. இதனால், விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே புன்னம் சத்திரம், மூன்று சாலை சந்திப்பில் ரவுண்டானா அமைக்க, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

