/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரேஷன் குறைதீர் முகாம் மனுக்கள் வழங்கிய மக்கள்
/
ரேஷன் குறைதீர் முகாம் மனுக்கள் வழங்கிய மக்கள்
ADDED : செப் 14, 2025 04:54 AM
குளித்தலை: குளித்தலை தாசில்தார் அலுவலகத்தில், வட்ட வழங்கல் துறை சார்பில் நேற்று உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், மக்கள் குறைதீர் முகாம் நடந்தது.
டி.எஸ்.ஓ., வைரபெருமாள் தலைமை வகித்தார். தனி தாசில்தார் வெங்கடேஷ், முதுநிலை ஆர்.ஐ.,க்கள் துரைசாமி, விஜய்ஆனந்த் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து பொது மக்களிடமிருந்து குடும்ப அட்டை சம்மந்தமான கோரிக்கை மனுக்கள் பெறப்-பட்டன.
அலுவலக இளநிலை உதவியாளர்கள் விக்னேஸ்வரன், யுவராஜ், அலுவலக உதவியாளர் அதியமான், வி.ஏ.ஓ.,க்கள் மற்றும் வருவாய் துறையினர் பங்கேற்று, அரசின் திட்டங்கள் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், மொபைல்போன் எண் இணைத்தல், முகவரி மாற்றம், நகல் குடும்ப அட்டை என பல்வேறு வகையில் மனுக்கள் பெறப்பட்டன.