/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வேணுகோபால கிருஷ்ணன் அலங்காரத்தில் பெருமாள்
/
வேணுகோபால கிருஷ்ணன் அலங்காரத்தில் பெருமாள்
ADDED : ஜன 04, 2026 07:58 AM
கரூர்: கரூர் அபய பிரதான ரங்கநாதர் சுவாமி கோவிலில், நேற்று ஐந்தாம் நாள் ராப்பத்து உற்ச-வத்தில், வேணுகோபால கிருஷ்ணன் அலங்கா-ரத்தில் பெருமாள் காட்சியளித்தார்.
வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, கரூர் அபய பிரதான ரங்கநாதர் சுவாமி கோவிலில் பகல் பத்து உற்சவம் முடிந்தது.
கடந்த, 30ல் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து ராப்பத்து உற்சவம் தொடங்கியது. நேற்று, வேணுகோபால கிருஷ்ணன் அலங்கா-ரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இன்ற வாமண அவதார அலங்காரம், 5ல், ராஜ-தர்பார் அலங்காரம் நடக்கிறது. 6ம் தேதி குதிரை வாகனம், 7ல் ஆண்டாள் திருக்கோலம் அலங்-காரம், வரும், 8 ல் ராப்பத்து, 9ல் ஊஞ்சல் உற்சவம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

