/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தேர் செல்லும் மாடவீதிகளில் ஆக்கிரமிப்பு அகற்ற கோரி கரூர் கலெக்டரிடம் மனு
/
தேர் செல்லும் மாடவீதிகளில் ஆக்கிரமிப்பு அகற்ற கோரி கரூர் கலெக்டரிடம் மனு
தேர் செல்லும் மாடவீதிகளில் ஆக்கிரமிப்பு அகற்ற கோரி கரூர் கலெக்டரிடம் மனு
தேர் செல்லும் மாடவீதிகளில் ஆக்கிரமிப்பு அகற்ற கோரி கரூர் கலெக்டரிடம் மனு
ADDED : செப் 24, 2024 01:09 AM
கரூர்: கடம்பவனேஸ்வரர் கோவில் தேர் செல்லும் மாடவீதிகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என, குளித்தலை நக-ராட்சி, 5வது வார்டு பொதுமக்கள், கரூர் கலெக்டர் குறைதீர் கூட்-டத்தில் மனு அளித்தனர்.
அதில், கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டம குளித்தலையில் கடம்பவனேஸ்வரர் கோவில் உள்ளது. காவிரி தென்கரையில் உள்ள கோயிலில், தை பூச திரு-விழா மிகவும் பிரசித்தி பெற்றது . பெரிய திருவிழா காலங்களில், ஸ்வாமி, அம்பாள் ஆகியோர் தேரிலும், சிறிய திருவிழாவில் பல்-லாகிலும் புறப்பாடு நடக்கும். இவைகள் செல்வதற்கு இடையூ-றாக நான்கு மாடவீதிகளில் ஏராளமான ஆக்கிரமிப்பு உள்ளன. சாலை குறுகலாக மாறியதால், திருவிழா நாட்களில் தேர்
ஓடவும், பல்லக்கை சுமந்து செல்வதற்கும் கஷ்டப்பட வேண்டி உள்ளது. அந்த வீதிகளில் பக்தர்கள் நடமாடுவது கடினமாகும். கோயில் நிர்-வாகம் பலமுறை சொல்லியும், நகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை
எடுக்கவில்லை. உடனடியாக மாவட்ட நிர்-வாகம் தலையிட்டு, நான்கு மாடவீதிகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

