/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புதிய மரக்கன்றுகள் நடும் பணி தீவிரம்
/
புதிய மரக்கன்றுகள் நடும் பணி தீவிரம்
ADDED : அக் 08, 2025 01:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம், கொம்பாடிப்பட்டி கிராம நெடுஞ்சாலை ஓரம், புதிய மரக்கன்றுகள் நடும் பணியில், நுாறு நாள் திட்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம் பஞ்., கொம்பாடிப்பட்டி கிராம நெடுஞ்சாலை ஓரத்தில், மரக்கன்றுகள் நடும் பணியில், நுாறு நாள் திட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர். முன்னதாக, மரக்கன்று நடும் இடங்களில் துாய்மை பணி நடந்தது. தொடர்ந்து, மரக்கன்றுகள் நடுவதற்கு ஏதுவாக குழி தோண்டும்பணி நடந்தது. இப்பணி முடிந்ததும், பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடப்பட உள்ளன.