sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வடிகால் வாய்க்காலில் செடிகள் ஆக்கிரமிப்பு மழையால் சாலையில் வெள்ள நீர் ஓடும் அபாயம்

/

வடிகால் வாய்க்காலில் செடிகள் ஆக்கிரமிப்பு மழையால் சாலையில் வெள்ள நீர் ஓடும் அபாயம்

வடிகால் வாய்க்காலில் செடிகள் ஆக்கிரமிப்பு மழையால் சாலையில் வெள்ள நீர் ஓடும் அபாயம்

வடிகால் வாய்க்காலில் செடிகள் ஆக்கிரமிப்பு மழையால் சாலையில் வெள்ள நீர் ஓடும் அபாயம்


ADDED : டிச 04, 2024 01:43 AM

Google News

ADDED : டிச 04, 2024 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், டிச. 4-

கரூர் அருகே, மழைநீர் வடிகால் வாய்க்காலில் செடி, கொடிகள் அதிகளவில் முளைத்துள்ளன. இதனால், அதிகளவில் மழை பெய்யும் போது, திருச்சி சாலையில் வெள்ள நீர் ஓடும்

அபாயம் உள்ளது.

கரூர்-திருச்சி சாலை தெரசா கார்னர் பகுதி, கொளந்தானுார் சாலையில், மழைநீர் வடிகால் வாய்க்கால் செல்கிறது. அந்த வாய்க்கால் கரை பகுதியில், மின்சார டிரான்ஸ்பார்மரும், மின் கம்பங்களும் உள்ளன. மழை நீர் வடிகால் வாய்க்காலில் அதிகளவில், செடி கொடிகள் முளைத்துள்ளன. பல மாதங்களுக்கு முன், கொளந்தானுார் பகுதியில் மழை பெய்த பொது, வடிகால் வாய்க்கால் நிரம்பி, திருச்சி சாலையில் வெள்ள நீர் ஓடியது. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டி கள் பெரும் அவதிப்பட்டனர். வடகிழக்கு பருவமழை துவங்கும் முன், மழைநீர் வடிகால் வாய்க்காலை துார் வார வேண்டும் என, கொளந்தானுார் பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், மழைநீர் வடிகால் வாய்க்கால் துார் வாரப்படவில்லை. தற்போது, கரூர் மற்றும் கொளந்தானுார் பகுதி

யில் மழை பெய்து வரும் நிலையில், வடிகால் வாய்க்காலில் தண்ணீர் செல்கிறது. நடப்பு டிச., மாதத்தில் அதிகளவில் மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கொளந்தானுார் பகுதியில் கால்நடை பராமரிப்பு துறை அலுவலகம், கால்நடை மருத்துவமனை, அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி, தனியார் மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஏராளமான வீடுகள் உள்ளன. வரும் நாட்களில் கரூர் நகர் மற்றும் கொளந்தானுார் பகுதியில் அதிகளவில் மழை பெய்யும் போது, வடிகால் வாய்க்கால் நிரம்பி, திருச்சி சாலையில் மீண்டும் வெள்ள நீர் ஓடும் அபாயம் உள்ளது. எனவே, கரூர்-திருச்சி சாலை தெரசா கார்னர் பகுதி, கொளந்தானுார் சாலையில் உள்ள, மழைநீர் வடிகால் வாய்க்காலை துார்வார, கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us