/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வடிகாலில் மண்டிய செடிகள் தண்ணீர் செல்வதில் பாதிப்பு
/
வடிகாலில் மண்டிய செடிகள் தண்ணீர் செல்வதில் பாதிப்பு
வடிகாலில் மண்டிய செடிகள் தண்ணீர் செல்வதில் பாதிப்பு
வடிகாலில் மண்டிய செடிகள் தண்ணீர் செல்வதில் பாதிப்பு
ADDED : ஆக 29, 2025 01:17 AM
கிருஷ்ணராயபுரம், :சிவாயம் பஞ்சாயத்து பகுதியில், மழைநீர் செல்லும் வடிகால் வழித்தடங்களில் அதிகமான செடிகள் வளர்ந்து வருவதால், தண்ணீர் செல்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த சிவாயம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கோடங்கிப்பட்டி பகுதியில் இருந்து, சிவாயம் குளத்திற்கு மழைநீர் செல்லும் வழித்தடங்களில் அதிகமான செடிகள் வளர்ந்து வருகிறது.
இதனால் மழை காலங்களில் தண்ணீர் செல்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோடங்கிப்பட்டி பகுதியில் உள்ள மழைநீர் சிவாயம் குளத்திற்கு செல்லும்போது, செடிகள் வளர்ச்சி காரணமாக அருகில் உள்ள விளை நிலங்களில் மழைநீர் புகுந்து விடுகிறது. இதனால் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
எனவே, மழைநீர் செல்லும் வழித்தடங்களில் வளர்ந்து வரும் செடிகளை அகற்றி, சிவாயம் குளத்திற்கு மழை நீர் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

