sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பொன்னணியாறு அணை வனப்பகுதியில் 'நெகிழி' அகற்றம்: விழிப்புணர்வு பேரணி

/

பொன்னணியாறு அணை வனப்பகுதியில் 'நெகிழி' அகற்றம்: விழிப்புணர்வு பேரணி

பொன்னணியாறு அணை வனப்பகுதியில் 'நெகிழி' அகற்றம்: விழிப்புணர்வு பேரணி

பொன்னணியாறு அணை வனப்பகுதியில் 'நெகிழி' அகற்றம்: விழிப்புணர்வு பேரணி


ADDED : ஜூலை 20, 2025 05:33 AM

Google News

ADDED : ஜூலை 20, 2025 05:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த கடவூர் யூனியன், பொன்னணியாறு அணை வனப்பகுதியில் நெகிழிகளை அகற்றும் பணி, விழிப்பு-ணர்வு பேரணி, கருத்தரங்கு, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்-தது.

மாவட்ட வன அலுவலர் சண்முகம் தலைமை வகித்தார். கரூர் வனச்சரக அலுவலர் அறிவழகன், கடவூர் தாசில்தார் சவுந்திர-வள்ளி, கடவூர் தெற்கு ஒன்றிய, தி.மு.க., செயலாளர் சுதாகர், யூனியன் கமிஷனர் மங்கையர்கரசி ஆகியோர் முன்னிலை வகித்-தனர். கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.முன்னதாக, வனப்பகுதியில் நெகிழிகளை அகற்றுவது, பயன்ப-டுத்துவதை தவிர்த்தல் குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது. தொடர்ந்து, பொன்னணியாறு வனப்பகுதியில் நெகிழிகளை அகற்றும் பணி நடந்தது. இதில், 500 கிலோ, 'நெகிழி' சேகரித்து, பஞ்., நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். பின், விழிப்புணர்வு கருத்-தரங்கு நடந்தது. மாவட்ட வன அலுவலர் சண்முகம் பேசுகையில், ''நாம் அனைவரும், ''நெகிழி பொருட்களை பயன்-படுத்துவதை தவிர்த்து துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும். வீடு, வீதி, வனப்பகுதி, கோவில்களில், 'நெகிழி' இல்லாத இட-மாக பாதுகாக்க வேண்டும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us