/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பிளஸ் 2 ஆங்கில மொழி தேர்வு 161 மாணவ, மாணவிகள் 'ஆப்சென்ட்'
/
பிளஸ் 2 ஆங்கில மொழி தேர்வு 161 மாணவ, மாணவிகள் 'ஆப்சென்ட்'
பிளஸ் 2 ஆங்கில மொழி தேர்வு 161 மாணவ, மாணவிகள் 'ஆப்சென்ட்'
பிளஸ் 2 ஆங்கில மொழி தேர்வு 161 மாணவ, மாணவிகள் 'ஆப்சென்ட்'
ADDED : மார் 06, 2024 02:20 AM
கரூர்:பிளஸ் 2 ஆங்கில மொழி தேர்வில், 161 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை.
தமிழகத்தில்
பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச், 1ல் தொடங்கி, 22 வரை வரை
நடக்கிறது. இதில் கரூர் மாவட்டத்தில், 43 தேர்வு மையங்களில், 104
மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதி
வருகின்றனர். மாவட்டத்தில், 9,705 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து
இருந்தனர். நேற்று ஆங்கில் மொழி பாடத்திற்கான தேர்வு நடந்தது. அதில்,
62 பேருக்கு மொழி தேர்வு எழுத விலக்கு அளிக்கப்பட்ட நிலையில், 4,254
மாணவர்கள், 5,228 மாணவிகள் என மொத்தம், 9,482 பேர் எழுத வேண்டும்.
ஆனால், 161 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு மையங்களில் பணியாற்ற
முதன்மை கண்காணிப்பாளர்களாக, 46 தலைமை ஆசிரியர்கள், 46 துறை
அலுவலர்கள், அறை கண்காணிப்பாளர்களாக, 822 ஆசிரியர்கள் நியமனம்
செய்யப்பட்டுள்ளனர்.

