/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சிறுமிக்கு தொல்லை வாலிபர் மீது போக்சோ
/
சிறுமிக்கு தொல்லை வாலிபர் மீது போக்சோ
ADDED : மே 19, 2025 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் அருகே, திருமணம் செய்துகொள்வதாக கூறி, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலி தொழிலாளியை, போக்சோ சட்டத்தில் மகளிர் போலீசார் கைது
செய்தனர்.
கரூர் மாவட்டம், புஞ்சை தோட்டக்குறிச்சி தளவாப்பாளையம் பகுதியை சேர்ந்த சோலைமலை மகன் அஜித்குமார், 23; இவர் கடந்த, 2024 மார்ச், 13ல், 17 வய-துடைய சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக கூறி காதலித்-துள்ளார். பின், சிறுமிக்கு அஜித்குமார் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
ஆனால், அஜித்குமார் கடந்த, 16ல் வேறு ஒரு பெண்ணை திரு-மணம் செய்துகொண்டார். இதுகுறித்து, சிறுமி அளித்த புகார்படி, கரூர் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி, அஜித்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.