/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நில அபகரிப்பு புகாரில் போலீஸ் காவல் முடிந்தது மாஜி அமைச்சர் தம்பி மீண்டும் சிறையில் அடைப்பு
/
நில அபகரிப்பு புகாரில் போலீஸ் காவல் முடிந்தது மாஜி அமைச்சர் தம்பி மீண்டும் சிறையில் அடைப்பு
நில அபகரிப்பு புகாரில் போலீஸ் காவல் முடிந்தது மாஜி அமைச்சர் தம்பி மீண்டும் சிறையில் அடைப்பு
நில அபகரிப்பு புகாரில் போலீஸ் காவல் முடிந்தது மாஜி அமைச்சர் தம்பி மீண்டும் சிறையில் அடைப்பு
ADDED : செப் 22, 2024 02:54 AM
கரூர்:நில அபகரிப்பு புகாரில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் தம்பி, போலீஸ் விசாரணை முடிந்த நிலையில், மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கரூர் மாவட்டம், வாங்கல் குப்புச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ், 50, தொழில் அதிபர். இவரது மகள் ேஷாபனா பெயரில், கரூர் அருகே குன்னம்பட்டி, தோரண கல்பட்டியில் 22 ஏக்கர் நிலம் உள்ளது.
இந்த நிலத்தை போலியான ஆவணங்கள் மூலம் யுவராஜ், பிரவீன், ரகு, சித்தார்த்தன், புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூர் அ.தி.மு.க., துணை செயலர் செல்வராஜ், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் மாரப்பன் ஆகியோர், கிரையம் செய்து கொண்டதாக, கரூர் மேலக்கரூர் சார் - பதிவாளர் முகமது அப்துல் காதர் ஜூன், 9ல் கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார்.
தற்போது, இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீசார் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வழக்கில், ஜூலை, 17ல் கேரளா மாநிலத்தில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், பிரவீன் ஆகியோரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பிறகு, ஜூலை 30ல் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், பிரவீன் ஆகியோருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது.
நில அபகரிப்பு புகாரில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தம்பி சேகர், 57, என்பவரை செப்.,2ல் சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், தொழில் அதிபர் பிரகாஷ், கொடுத்த கொலை மிரட்டல் புகாரில், சேகரை வாங்கல் போலீசாரும் கைது செய்தனர்.
வழக்கு தொடர்பாக, சேகரை இரண்டு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கரூர் ஜே.எம்.,-1 நீதிபதி பரத்குமார் கடந்த, 18ல் வாங்கல் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
விசாரணை முடிந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, நீதிபதி பரத்குமார் முன்னிலையில் வாங்கல் போலீசார், சேகரை ஆஜர்ப்படுத்தி செப்., 25 வரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.